ஆர்மேனிய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி!
ஆர்மேனிய பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்மேனிய பிரதமர் நிகோல் பாஷினியன் தனது பேஸ்புக்கில் தனக்கு கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு எந்தவொரு அறிகுறியும் இல்லாத நிலையில் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு நான் வீட்டிலிருந்து பணியாற்ற இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஹோட்டல் ஊழியர் மூலம் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக நிகோல் பாஷினியன் கூறியுள்ளார். மேலும் நிகேலின் குடும்பத்தினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.