மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட உலக அதியங்களில் ஒன்றான கொலோசியம்!!
இத்தாலி தலைநகர் ரோமிலுள்ள உலக அதியங்களில் ஒன்றான கொலோசியம் 3 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு 75 இலட்சம் பார்வையாளர்கள் ஈர்த்த பண்டைய ரோமானிய நாகரிகங்களின் அடையாளமான கொலோசியம், கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி மூடப்பட்டது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைய தொடங்கியதால் 30 நாட்கள் சோதனை முயற்சியாக காலை 10.30 முதல் இரவு 7.15 வரை கொலோசியத்தை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றுப்பயண காலத்திலும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் 14 பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என்று கொலோசியம் தொல்பொருள் பூங்காவின் இயக்குனர் அல்போன்சினா ருஸ்ஸோ (Alfonsina Russo)தெரிவித்துள்ளார்.
The #Colosseum in #Rome reopened to visitors for the first time since early March. https://t.co/LeZ0DklEYX
— euronews (@euronews) June 1, 2020