சிறுநீர் கழிக்க இயலாமல் தவித்த நபர் ஒருவருக்கு மருத்துவப் பரிசோதனையின் பின் காத்திருந்த பேரதிர்ச்சி….!!!
சிறுநீர் கழிக்க இயலாமல் தவித்த ஒரு நபரின் சிறுநீரகப்பையில் ஒரு துப்பாக்கி குண்டு இருப்பதைக் கண்டறிந்தனர் மருத்துவர்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவருக்கு , சிறுநீர் கழிக்கும் போது பயங்கர எரிச்சலும் வலியும் ஏற்பட்டுள்ளதுடன், சில நேரங்களில் சிறுநீர் முழுமையாக வராமல் தடைபட்டிருக்கிறது. இதன் பின்னர் மருத்துவமனைக்கு சென்ற நபரை பரிசோதித்த போது அவரது சிறுநீரகப்பையில் ஒரு துப்பாக்கி குண்டு இருப்பதைக் கண்டறிந்தனர்.
குறித்த நபரின் சிறுநீரகப்பையில் அந்த துப்பாக்கி குண்டைச் சுற்றி சிறுநீரகக் கற்கள் உருவானதால், அவையும் குண்டின் கூர்மையான பரப்புகளும் அவருக்கு எரிச்சலையும் வலியையும் கொடுத்துள்ளதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குழாய் மூலம் அந்த குண்டை அகற்றும் முயற்சி தோல்வி அடைந்தால் அடி வயிற்றில் ஒரு அறுவை சிக்கிச்சை செய்து அந்த குண்டை அகற்றியுள்ளனர் மருத்துவர்கள் அந்த துப்பாக்கி குண்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நடந்தது என்ன என்றால் 1990 ஆம் ஆண்டு அந்த நபர் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறார். அந்த வேளையில் அந்த குண்டை எடுத்தால் ஆபத்து என்பதால் மருத்துவர்கள் அதை எடுக்காமலே விட்டிருக்கிறார்கள். இப்போது இத்தனை வருடங்களுக்கு பிறகு அந்த குண்டு தொல்லை கொடுத்தால் அகற்றப்பட்டிருக்கிறது. இனி சிறுநீர் கழிப்பதில் அவருக்கு எந்த பிரச்னையும் இருக்காது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.