எல்பிட்டி பிரதேச சபை தேர்தல் பெறுபேறுகள் இன்றிரவு 10 மணிக்கு முன்னர் வெளியாகும்…!!!
எல்பிட்டி பிரதேச சபை தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் நிறைவுபெற்றுள்ளது. அந்த வகையில் இன்று மாலை 4 மணி வரை 75மூ வாக்குகள், பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கூறியுள்ளார்.
இன்றிரவு 10 மணிக்கு முன்னர் பெறுபேறு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். எல்பிட்டி பிரேதேச சபைத் தேர்தலில் 53 ஆயிரத்து 384 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றனர். இந்த தேர்தல் மூலம் எல்பிட்டி பிரதேச சபைக்கு 28 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளது. அவர்களில் 17 பேர் தொகுதிவாரியாகவும், 11 பேர் விகிதாசர முறையிலும் தெரிவு செய்யப்படுவுள்ளனர்.
மேலும் இந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி. ஜே.வீ.பி மற்றும் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய அங்கீகரிக்கப்பட்ட 5 கட்சிகளை அங்கத்துவப்படுத்தி 155 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்த தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 500 காவற்துறை அதிகாரிகளும் காவற்துறை விஷேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.