டோக்கியோவைத் தாக்கிய ஹகிபிஸ் புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவைத் தாக்கிய ஹகிபிஸ் புயல் காரணமாக உயிரிந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரெய்வித்துள்ளார். அதனை தொடர்ந்து 15 பேர் காணாமால் போயுள்ளதுடன் 100 பேர் காயமடைந்துள்ளனர்.
டோக்கியோவைத் தாக்கிய புயல் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது.
மேலும் இந்த புயலை தொடர்ந்து ஏற்பட்ட மழை வீழ்ச்சி மற்றும் வெள்ளத்தினால் டோக்கியோவின் தென் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் போது ஜப்பானில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பலர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு 27 ஆயிரம் பொலிஸ் துறையினர் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.