கோத்தபாய ராஜபக்சவின் தவத்திற்கு வரம் கிடைக்குமா???
இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை உறுதி செய்து கொள்வதற்காக வடக்கு தமிழ் மக்களின் வாக்குகள் மிகவும் முக்கிய விடயமாகவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அனைத்து கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் வடக்கு வாக்குகளை வெற்றி பெறுவதற்காக தீவிர முயற்சிகளைமுன்னெடுத்து வருகின்றனர். அது வீண் முயற்சி என கோத்தபாயவுடன் நெருக்கமாக செயற்படும் அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறைந்த பட்சம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கினாலும், வடக்கில் வாழும் தமிழ் மக்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கு மாத்திரம் அல்ல ராஜபக்ச குடும்பத்தையே அடியோடு நிராகரிப்பதாக தேசிய பட்டியில் உள்ள தமிழ் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அதற்கு அமைய வடக்கில் மேற்கொள்ளும் முயற்சிகளை முடிந்த அளவு தெற்கில் பயன்படுத்தி வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.