துடிக்க துடிக்க இளம்பெண்ணை தீ வைத்து எரித்த கொடூரர்கள்..! இந்தியாவில் நடந்தேறிய துயரம்..!!
யார் வந்தாலும் இந்த விடயங்களை மாற்றவே முடியாது என சில விடயங்கள் இருக்கும். அதில் ஒன்று தான் சாதிவெறி. இந்த சாதி எப்படி எங்கிருந்து உருவானது.!? சாதி என்பது மனிதனால் பிரிக்கப் பட்டதே தவிர எந்த ஒரு சாதியும் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து வரவில்லை.
செய்யும் தொழிலை வைத்து சாதியை பிரித்துவிட்டு இன்று அடிபட்டு செத்துக் கொண்டிருக்கின்றோம், மற்றவர்களையும் கொன்று புதைத்துக் கொண்டிருக்கின்றோம். சாதி வெறியால் வாழ வேண்டிய பல உயிர்களை பறித்துக் கொண்டிருக்கின்றோம்.
அப்படி நேற்றைய தினமும் ஒரு உயிர் பறிக்கப் பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரில் யுவதி ஒருவர் கல்லூரியில் படித்த சக மாணவனை காதலித்து வந்துள்ளார். சாதியை காரணம் காட்டி பெற்றோர் திருமணத்திற்கு மறுத்துள்ளனர். ஆனால் குறித்த யுவதியோ கல்லூரி படிப்பு முடிந்த பெண் இளைஞரை சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த பெண் வீட்டார் இளம்பெண்ணை எரித்து கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். வழமையான வழக்குகளை போல் இதுவும் முடிந்து விடும். நாளை வேறொரு பெண்..!! தொடரும் ஆணவக் கொலைகள் ..’!