புர்கினோ பசோவின் தேவாலயத்தில் துப்பாக்கி பிரயோகம்…!!!
ஆப்ரிக்கா நாடான புர்கினோ பசோவிலுள்ள தேவாலயம் ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் 14 பேர் பரிதாபமாக பலியானார். ஆயதம் ஏந்திய குழு ஒன்றினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் மற்றும் பொறுப்பை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரைக்கும் ஏற்கவில்லை. தொடர்தும் இது போன்ற சம்பவங்கள் மேற்கு ஆப்ரிக்க எல்லைப்பகுதிகளில் நடைபெற்று வருவதாகவும் இந்த தாக்குதல்கள் மத அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.