இந்திய முதல் வாக்காளர் கவலைக்கிடம்!
இந்தியாவின் முதல் வாக்களர் என்ற பெருமையுடன் உள்ளவரின் உடல்நிலை கவலையளிக்கும் விதமாக உள்ளது எனத் தெரியவருகின்றது.
பிரிட்டனிடமிருந்து இந்தியா 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அதன் பின்னர் ஜனநாயக இந்தியாவில் 1951ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.
அந்தத் தேர்தலில் முதல் முதலில் வாக்களித்தவர் இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நேகி (வயது 103) என்பவர் ஆவார்.
இந்திய வரலாற்றில் முதல் வாக்காளர் என்ற பெருமையைப் பெற்ற அவர், இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஒருவராக விளங்குகிறார்.
இந்நிலையில், நேகியின் உடல்நிலை சற்று மோசமாக உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு இமாச்சல மாநிர அரசு சார்பில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேகி ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.