இலங்கையில் சற்று முன்னர் கொரோனா வைரஸின் நிலவரம்..!
இலங்கையில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் இருவர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை இன்று மதியத்திற்கு பின்னர் கொரோனா தொற்றிற்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டிருந்தார். அதன் அடிப்படையில் இலங்கையில் 219 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.