ரஜரட்ட பல்கலைக்கழக மாணவி ஒருவர் திடீர் உயிரிழப்பு…!!!
இலங்கையின் அனுராதபுரம் மாவட்டத்தில் மிகிந்தலைக்கு அருகே அமைந்துள்ள ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவில் இரண்டாம் ஆண்டு கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். கண்டியில் பிலிமதலாவை பிரதேசத்தை சேர்ந்த ஒஷானி எரங்கிக்கா பிட்டவல என்ற மாணவியே இவ்வாறு இறந்துள்ளார்.
இலங்கையில் பல இடங்களில் டெங்கு தீவிரமாக பரவி வருகின்றது. அந்த வகையில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த மாணவி பரீட்சைக்காக சென்ற நிலையில், காய்ச்சல் ஏற்பட்டு பிலிமதலாவையில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து அங்கு இருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் வாழுகின்ற அனைத்து மக்களும் மிக கவனமாகவும் உஷாராக காய்ச்சல்அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை நடவும், தகுந்த சிகிச்சை பெற்று கொள்ளுமாறு அதிகாரிகள் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.