இலங்கையில் கண் நோய் தொற்று தீவிரமாக பரவல்..!! வைத்தியர்கள் எச்சரிக்கை.!!
இலங்கை முழுவதும் அண்மையில் பல நோய்கள் தீவிரமாக பரவி வருகின்றது. அந்த உக்கிரமாக கண் நோய் தொற்று பரவி வருகின்றதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த நோய் மேலும் பரவுவதனை தடுப்பதற்காக மக்கள் சுகாதார பிரிவின் ஆலோசனையை கடைப்பிடிக்குமாறு தேசிய கண் வைத்தியசாலை இயக்குனர் மோனிக்காக விஜேரத்ன பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்களில் கண்ணீர் வடிதல், கண் சிவத்தல் மற்றும் கண்களில் வலி ஆகிய அறிகுறிகளே இந்த நோய் தொற்றிற்கான காரணமாகும். அவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையில் பரவிய வைரஸ் நோய் தொற்று காரணமாக அந்த பல்கலைக்கழத்தின் 4 பீடங்கள் மூடப்பட்டுள்ளது.