15 நாட்களுக்குள் இவர்களின் ஆணுறுப்பை அறுத்து விடுவேன்.! கோபத்தின் உச்சத்தில் வீரலட்சுமி வெளியிட்ட வீடியோ.!
15 நட்களுக்குள் இருவரின் ஆணுறுப்பை அறுத்து விடுவேன் என தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் கி.வீரலட்சுமி. இவர் தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் சமூக சீர்கேடுகள், அரசியல், சட்டம் என பேசி வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகதாது அணை பற்றி பேசிய வீரலட்சுமி தனது எதிர்ப்பை வெளியிட்டதுடன் போராட போவதாக கூறி இருந்தார். இதனால் கடுப்பான இருவர் வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியுள்ளனர். இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால் என கூறி பல ஆபாச வீடியோக்கள் மற்றும் தகாத வார்த்தை பிரயோகங்கள் என அனுப்பியுள்ளனர்.
இதனை பார்த்த வீரலட்சுமி பொலீஸில் புகார் அளித்துள்ள நிலையில் இது வரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. 15 நாட்களுக்குள் பொலீஸார் குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை கொடுக்காவிட்டால் தான் தண்டனை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். அதுவும் சாதாரண தண்டனை இல்லை என்றும் அவர்களின் ஆணுறுப்பை அறுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.!!