கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து..!! ஆறு பேர் பலி..!
கிளிநொச்சி 55ஆம் கட்டை காளி கோயிலடி பகுதியில் புகையிரதத்துடன், கனரக இராணுவ வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் குறித்த விபத்தில் சிக்கிய இராணுவ வீரர்கள் சம்பவ இடத்தில் 06 பேர் பலியாகியுள்னர்.
புகையிரத பாதுகாப்பு கடவையில் இருந்த சமிக்ஞை வேலை செய்யாத நிலையில், புகையிரத பாதையை கடந்த கனரக இராணுவ வாகனம் கொழும்பிலிருந்து பயணித்த கடுகதி புகையிரதத்துடன் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.