கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்ட ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்..!!
கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் இன்று காலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்ட ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு உயிரிழந்தவரின் விபரங்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.