பெற்ற மகளை கொடூரமாக சித்திரவதை செய்த தாய்.! இலங்கையில் நடந்த துயர சம்பவம்..!!
இலங்கையில் பலாங்கொட பகுதியில் பெற்ற தாயே மகளுக்கு கொடுமைகாரியாக மாறிய சம்பவம் ஒன்று நேற்றைய தினம் பதிவாகி உள்ளது. பலாங்கொடை பகுதியில் உள்ள சிறிய வீடொன்றில் 14 வயதான சிறுமி ஒருவரை பெண் ஒருவர் பாடசாலை செல்லவிடாமல் தடுப்பதுடன் வன்முறைகளை கையாள்வதாக கொழும்பு சிறுவர் பாதுகாப்பு பணியகத்திற்கு நபர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பாக பரீசோதனை செய்யுமாறு பலாங்கொடை சிறுவர் & பெண்கள் பாதுகாப்பு பணியக அதிகாரிகளுக்கு அறிவிக்கப் பட்டது. பரிசோதனைக்காக குறித்த வீட்டிற்கு அதிகாரிகள் சென்ற போது தாய் இல்லாத நிலையில் 14 வயதான சிறுமி மட்டுமே இருந்துள்ளார்.
முகம் மற்றும் உடலில் பல இடங்களில் காயத்தின் தழும்புகள் உள்ள நிலையில் முதுகில் கொதி நீர் ஊற்றிய காயம் இருந்துள்ளது. மருந்து கூட போடாத நிலையில் சிறுமி இருந்துள்ளார். தந்தை உயிர்ழந்த நிலையில் தாயுடன் வசித்து வந்த சிறுமிக்கு ..
பெற்ற தாயே இப்படியான கொடுமையை செய்துள்ளது தெரிய வந்ததை தொடர்ந்து சிறுமி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தலை மறைவாகி உள்ள தாயை கைது செய்யும் பணி ஆரம்பமாகி உள்ளதாக பலாங்கொடைபொலீசார் தெரிவித்துள்ளனர்.