சற்று முன்னர் வெளிவந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..!!!
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணைய தளத்தின் வழியாக பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் 153 புள்ளிகளும், கிளிநொச்சி 152 புள்ளிகளும், மன்னார் 151 புள்ளிகளும், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு 152 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் மட்டக்களப்பு 152 புள்ளிகள், அம்பாறை 153 புள்ளிகள் மற்றும் திருகோணமலை 151 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் தமிழ் மொழிமூலம் 154 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பரீட்சை முடிவுகள் தொடர்பாக மேல்முறையீடுகள் 21ம் திகதிக்கு முன் செய்யப்பட வேண்டும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சுமார் மூன்று இலட்சத்து நாற்பதாயிரம் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.