என் குழந்தை இறந்த இடத்தில் என் ஆசை இது தான்… சுர்ஜித்தின் தாய் கண்ணீர் பேட்டி..!!
நேற்றைய தினம் ஒட்டுமொத்த தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தி சுர்ஜித் மரணமடைந்துவிட்டான். இந்த மரணத்தை ஒட்டுமொத்த இந்தியாவின் தோல்வியாகவும் விழிப்புணர்வாகவும் பார்க்கப் படுகிறது. குழந்தை இறந்த பின் பயன்பாட்டில் இல்லாத அத்தனை ஆழ்துளை கிணறுகளும் மூடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மகனை இழந்து தவிக்கும் கலாமேரி ஆரோக்கியதாஸ் தம்பதிகளுக்கு அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். மு.க ஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் நேரடியாக சுர்ஜித் வீட்டிற்கு சென்றதுடன் 10 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
அதே போல் இன்றி தமிழக முதலமைச்சர் நேரில் சென்று சந்தித்ததுடன் அரசு 10 லட்சம் ரூபாய் வழங்குமென தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சுர்ஜித்தின் தந்தை அளித்த பேட்டியில் அரசுக்கும் மக்களுக்கும் நன்றி. அரசாங்கம் குழந்தையை மீட்க அத்தனை உதவிகளையும் செய்தது. அதே போல் மக்களும் பிரார்த்தனை செய்தார்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
அதே நேரம் சுர்ஜித்தின் தாயார் அளித்த போட்டியில் அனைவருக்கும் நன்றி.. என் குழந்தையின் மரணம் ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு ஆகட்டும் இனி மேல் என் குழந்தைக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்க கூடாது என தெரிவித்துள்ளதுடன்.. என் ஆசை இப்போது என் குழந்தை இறந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்பது தான் என தெரிவித்துள்ளார்..!