30 ஆண்டுகளாக மணமகள் கோலத்தில் வலம் வரும் 66 வயது முதியவர்..!!! இது எங்க நடந்தது தெரியுமா??
கடந்த காலத்தில் மக்களிடையியே நிலவிய மூடநம்பிக்கை இன்றைய தொழிநுட்ப உலகிலும் காணப்பட்டு வருகின்றது. இது இந்தியாவில் அதிகளவான மக்கள் மூட நம்பிக்கையில் பல வினோதமான பழக்கவழக்கங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதில் சில மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய முதியவர் ஒருவர், கடந்த 30 ஆண்டுகளாக மணமகள் கோலத்தில் வலம் வருகின்றார். இந்த செயலுக்கு என்ன காரணம் என வினாவிய போது அதற்கு அவர் கூறும் காரணங்களோ சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
உத்தரப்பிரதேசத்தில் ஜான்பூர் பகுதியை சேர்ந்த சிந்தாகரன் சவுகான் என்பவருக்கு அவரது பெற்றோர், 14 வயதில் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் அவரது மனைவி, திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இறந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து தனது 21வது வயதில், வேலைக்கு சென்ற இடத்தில் வேறவொரு பெண்ணை திருமணம் செய்தார். இதனால் அவரது பெற்றோருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத காரணத்தால் குறித்த பெண்ணை விட்டு விட்டு தன் சொந்த ஊருக்கே வந்த நிலையில் சவுகானை பிரிந்த அவரது 2வது மனைவி தனிமை தாங்க முடியாமல் இறந்துள்ளார்.
சவுகானின் இரண்டாவது மனைவி இறந்த சம்பவம் அவருக்கு தெரியவந்தது. ஆனால், அவரது பெற்றோர் கட்டாயபடுத்தியதால் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த சில மாதங்களில் சவுகானுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அது மட்டும் இல்லாது அவரது மனைவி, குழந்தைகள், பெற்றோர் என குடும்பத்தினர் அடுத்தடுத்து இறக்க தொடங்கியுள்ளனர்.
இதை பார்த்து மன வருத்தும் அடைந்த சவுகான் என்ன செய்வது என்று கூட தெரியாமல் திகைத்து நின்ற போது அவரது 2வது மனைவி சவுகானின் கனவில் வந்து, இனிமேல் மணமகள் கோலத்திலேயே வலம் வரவேண்டும் எனவும் அப்படி செய்தால் குடும்பத்தில் இனி யாரும் இறக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
தனது இரண்டாவது மனைவி கனவில் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சவுகான், மணமகள் கோலத்திலேயே தனது ஊரில் நடமாடி வந்தார். முதலில் தன் கோலத்தை பார்த்து கேலி செய்த கிராமத்தினர் பின்னர் தன் கதையை கேட்டு பரிதாபத்தோடு பார்க்கிறார்கள் எனவும் தன்னுடைய இந்த கோலத்திற்கு பிறகு தன் குடும்பத்தினர் இறக்காமல் இருப்பதாகவும் தன் உடல் நலம் நல்ல முன்னேற்றம் அடைகிறது என குறிப்பிட்டார்.
மேலும் இந்த சம்பவத்தில் பலர் மூட நம்பிக்கை என கூறி வரும் நிலையில் இது உத்தரப்பிரதேச மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.