நித்தியானந்தா இருக்கும் இடம் கண்டுபிடிப்பு..! வெளிநாடு எல்லாம் போகவில்லை..இந்தியாவில் தான் இருக்கிறார்..! இத பாருங்கள்..!!
நித்தியானந்தா தொடர்பான புகார்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது நித்தியானந்தா மீது தேச துரோக வழக்கும் பதிவாகும் என சட்ட வல்லுனர்கள் கூறியுள்ளனர். நித்தியானந்தா மீது குழந்தை கடத்தல் , பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் தற்போது தேசத் துரோக குற்றச் சாட்டும் எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நித்தியாந்தாவை பொலீஸார் தேடி வந்த நிலையில் அவர் வெளி நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அண்மையில் தனி நாடு வாங்கி விட்டதாகவும் அந்த நாட்டிற்கு “நித்தியானந்தா கைலாஸா” என பெயர் இட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருந்த நித்தியானந்தா சட்ட ரீதியாக பதியப் படும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அது முடிந்தபின் அங்கு சென்று ஹிந்து சமயத்தை வளர்க்க போவதாகவும் தெரிவித்தார்.
இதற்கான பாஸ்போர்ட் மாதிரியினை தயார் செய்து கைலாசா நாட்டிற்காக தயார் செய்யப் பட்ட இணைய தளத்திலும் வெளியிட்டார். இது போல் அடிக்கடி நித்தியானந்தா வெளியிட்டுள்ள வீடியோக்களை ஆராய்ந்ததில் நித்தியானந்தா இந்தியாவை விட்டு வெளியேற வில்லை என்பததும் அவர் இமய மலை பகுதியில் இருந்து தான் இந்த வீடியோக்களை பதிவு செய்கிறார் என்பதும் உறுதியாகி உள்ளது.
பல குற்றச்சாட்டுகளுடன் மறைத்திருக்கும் நித்தியானந்தா சொந்த நாட்டில் இருந்து கொண்டு இன்னொரு நாடு கோரியுள்ளதும்..இன்னொரு தனி நாடு பற்றி பேசியுள்ளதும் தேச துரோகமாமும். இதனால் இருக்கும் வழக்குகளுடன் தேசத் துரோக வழக்கும் சேர்ந்துள்ளது. பார்க்கலாம் நித்தியானந்தா அவர்களை இந்திய பொலீஸ் கைது செய்யுமா என்று..!!