நாளை முதல் நாட்டில் 49 வங்கிக் கிளைகளை மூடல்.!மூடப்படும் வங்கிகளின் விபரம் இதோ..!!
இலங்கையை முழுமையாக கொரோனா வைரஸ் அக்ரமித்துள்ள நிலையில் சுமார் 1.5 லட்சம் பேர் பாதிக்கப் படலாம் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். இது வரை கொழும்பு, கம்பஹா குருநாகல், உட்பட சில மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ளதுடன், மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது.
அது மட்டும் இன்றி இன்னும் சில நாட்களில் இலங்கை முற்றிலும் முடக்கப் படும் வாய்ப்புகள் இருப்பதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வந்தவர்களால் கொரோனா பரவியுள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதுடன் இதனால் இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் மக்களை பாதுகாக்கும் முழு பொறுப்பும் அரசுக்கு உள்ளதாக எதிர்கட்சிகள் கூறி வரும் நிலையில் இலங்கை மக்கள் வங்கியின் கீழ் இயக்கும் 49 வங்கிகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரும் வரை மூடப் படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப் படுத்தும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக கூறியுள்ள மக்கள் வங்கி மக்கள் பாதுகாப்பான முறையில் டிஜிட்டல் பேங்கிங் மூலம் பணத்தை வைப்பில் இடவும், பெற்றுக் கொள்ளவும் முடியும் என் தெரிவித்துள்ளது,
இலங்கை முழுவதும் உள்ள 49 வங்கிக் கிளைகள் மூடுவது மக்களுக்கு இடையூராக இருப்பினும் கொரோனாவை கட்டுப் படுத்தும் இந்த செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.!