கொரோனா வைரஸை சீனா இந்த மருந்தின் மூலம் தான் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாம்..! முதல் முதல் மருந்தை அறிவித்த வைத்தியர்கள்…புகைப்படம் இணைப்பு…!!
கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் இதுவரை 59 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர். அத்துடன் 252 பேர் கொரோனா வைரஸ் பரிசோதனையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை 600 வரை உயரலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்தியாவில் இது வரை 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப் பட்டுள்ளதுடன் சுமார் 2 ஆயிரம் பேர் வரை மருத்துவ பரிசோதனையில் உள்ளனர். இந்த நிலையில் சீனா தனது நாட்டில் கொரோனாவை எப்படி கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தது என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
தனது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அதிகம் கொடுக்கப் பட்ட மருந்து ஜப்பானில் இருந்து கொள்வனவு செய்யப் பட்ட favipiravir என்ற மருந்து என குறிப்பிட்டுள்ள சீனா இந்த மருந்தால் வுஹானில் மட்டும் 340 பேர் முழுவதும் குணமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
Fujifilm நிறுவனத்தின் துணை நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த மருந்து கொடுக்கப் பட்டவர்களில் 90 சதவீதமானவர்களின் கொரோனா தாக்கம் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் இந்த மருந்து கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து ஓரளவு பாதுகாக்கிறது என தெரிவித்தார்..!!