கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா வந்தால் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படுமா.!? மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட மருத்துவர்கள்..!!
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பரவி வருகின்ற நிலையில் யார் யாருக்கு இலகுவாக தாக்கும் என்பது பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை நொடிப் பொழுதில் கொரோனா வைரஸ் தாக்கி விடுகிறது. அதே போல் சிறுவர்கள், முதியவர்கள், போன்றோரையும் தாக்குகிறது.
இந்த நிலையில் பலரது கேள்வியான கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா ஏற்பட்டால் குழந்தைக்கும் அந்த தொற்று ஏற்படுமா !? அல்லது பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கான பதிலை ஆய்வுக்கு பின் வைத்தியர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் முதல் மூன்று மாதம் கர்ப்பிணியாக இருக்கும் போது கொரோனா வைரஸ் தாக்கினால் சற்று விளைவுகளை சந்திக்க வேண்டி வரலாம்.
இந்த நேரத்தில் மருத்துவ சிகிச்சைகளும் எடுத்துக் கொள்ள முடியாது, அதே போல் சிலருக்கு உடல் நிலை மிகவும் சோர்வாக இருப்பதால் சற்று அவதானமாக இருக்க வேண்டும். ஆனால் மூன்று மாதங்களை கடந்த பின் பயம் தேவை இல்லை. குழந்தை வயிற்றில் இருக்கும் வரை தாயில் இருக்கும் கொரானா வைரஸ் குழந்தைக்கு தொற்றாது. பாதிப்பும் இருக்காது.
ஆனால் கொரானா தொற்றுக்கான அறிகுறிகள் கர்ப்பிணி பெண்ணுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனால் கர்ப்பிணியாக இருக்கும் போது கொரோனா தொற்று ஏற்பட்டதே என அச்சம் கொள்ள வேண்டாம். முறைப்படி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்…!!