40 பெண்களுடன் தகாத உறவில் இருந்து வீடியோ எடுத்த கணவர்..! அதிர்ந்து போன மனைவி..!! வைரலாகும் வீடியோவால் அதிரும் இணையம்..!!
40திற்கு மேட்பட்ட பெண்களுடன் தகாத உறவில் இருந்து வீடியோ எடுத்து வைத்திருந்த கணவர் தொடர்பில் மனைவி கொடுத்த புகாரின் பெயரில் பொலீஸார் 36 வயது நபர் ஒருவரை தேடி வருகிறார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எட்வின் ஜெயகுமார் என்பவருக்கு தஞ்சையை சேர்ந்த பட்டதாரி பெண்ணான தாட்சர் என்பவரை கடந்த டிசம்பர் மாதம் 2ம் திகதி திருமணம் செய்துள்ளார்.
பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப் பட்டதால் இருவருக்கும் இடையில் பெரிதான நெருக்கம் இருக்கவில்லை. முதலில் கணவன் தன்னுடன் பேசாமல் தொலைபேசியில் இருப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார். ஆனால் நாள் செல்ல சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவர் இல்லாத நேரம் பார்த்து அவரது மொபைலை பார்த்துள்ளார்.
அதில் சுமார் 40 பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் இருந்துள்ளது.இதனை பார்த்து அதிர்ந்த மனைவி உடனடியாக பொலீஸாருக்கு புகார் கொடுத்ததுடன் தொலைபேசியையும் பொலீஸாருக்கு கொடுத்துள்ளார். பொலீஸார் விசாரணையை ஆரம்பித்த நிலையில் அதிர்ந்து போய் உள்ளனர். விராலிமலையில் உள்ள பிரபல வங்கியில் பணி புரிந்து வந்துள்ளார்.
அங்கு வந்து செல்லும் பெண்களிடம் தொலைபேசி இலக்கத்தை குறித்து வைத்து கொள்ளும் எட்வின் அவர்களுடன் பேசி பின் நட்பாகி நட்பை காதலாக்கி அந்தரங்கம் வரை சென்று வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளார். வங்கியில் அதிக பண வைப்பு செய்யும் பெண்களை குறி வைப்பதால் பணம் அதிகமாகவே கிடைத்துள்ளது.
இதற்கு வங்கியில் பணி புரியும் பெண்ணான தேவி பிலோமினா என்பவர் உதவி செய்துள்ளார். எட்வினின் மனைவி பொலீஸில் புகார் கொடுத்ததால் இருவரும் தலை மறைவாகி உள்ளனர்.! குறித்த வீடியோக்களுடன் பெண் ஒருவரின் சடலத்தின் புகைப்படமும் இருப்பதால் எட்வின் காதலித்து கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. இந்த நிலையில் எட்வினை பொலீஸார் தேடி வருகின்றனர்..!!