அமைச்சர் ரவிகருணாநாயக்கா மீது குற்றம் சுமத்துகின்றதா? கனியவள தொழிற்சங்கம்..!!
முகத்துவாரம் மற்றும் மாவத்தை பகுதியில் புதிய எரிபொருள் குழாய் மார்க்கத்தை உருவாக்கும் பணிகளின் போது ஏற்பட்ட முரண்பாட்டு நிலைக்கு அமைச்சர் ரவிகருணாநாயக்கவே முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும் என கனியவள தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் இது கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை எரிப்பொருள் களஞ்சியசாலைக்கு எரிப்பொருளை கொண்டு செல்வதற்காக குறித்த புதிய குழாய் மார்க்கம் அமைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான பிரச்சனைகளுக்கு அமைச்சர் ரவிகருணாநாயக்கா ஒரு நல்ல தீர்வினை உடனடியாக பெற்று தராத பட்சத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அவரது அமைச்சின் கீழ் இயங்கும் மின்சாரசபைக்கு எரிப்பொருளை விநியோகிக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் எரிப்பொருள் விநியோக குழாய் தற்போது பாதிப்படைந்தால் கொலன்னாவை எரிப்பொருள் களஞ்சியசாலைக்கு மூன்று நாட்களில் கொண்டு செல்லக்கூடிய எரிப்பொருள் 6 நாட்களில் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் ஏற்படும் தாமதத்தின் காரணமாக இலங்கைக்கு எரிப்பொருளை கொண்டுவரும் கப்பல்களுக்காக மேலதிக கட்டணத்தை செலுத்த வேண்டி ஏற்படுவதாக குறிப்பிடுகின்றார்.
, 80 ஆண்டுகளுக்கு முன்னர் 10 அங்குல குழாய் மார்க்கமே இருந்ததாகவும் அதற்கு பதிலாக 12 அங்குல குழாய் மார்க்கத்தை உருவாக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர். குழாய் மார்க்கமானது முகத்துவாரம் ஊடாக செல்கின்றபோது அங்கு இருப்பவர்கள் அதற்கு தடையாக உள்ளார்கள். அந்த பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சர் ரவி கருணாநாயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கனியவள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.