வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுக்கு அரசின் அதிரடி அறிவிப்பு..! அதிகம் பகிருங்கள்…!!
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக பலர் போட்டியிட்ட போதும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச, அதே போல் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களின் மகன் சஜித் பிரேமதாச இருவருமே முன்னணி வேட்பாளராக உள்ளனர்.
இந்த நிலையில் வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுக்கு அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளி நாடு சென்ற வாக்காளர்கள் வாக்களிக்க விரும்பினால் இலங்கைக்கு வந்து வாக்களிக்க முடியும் என குறிப்பிட்டிருந்த நிலையில் அப்படி வாக்களிக்க வருபவர்கள் கட்டாயம் அவர்களின் கடவுசீட்டையும் வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்து வர வேண்டும் என குறிப்பிட பட்டுள்ளது.
2018ம் ஆண்டு பதிவு செய்த முகவரிக்கு அவர்களின் வாக்கு சீட்டுகள் அனுப்பி வைக்கப் படும். வாக்கு சீட்டுடன் கடவுச்சீட்டு அடையாள அட்டை, இரண்டும் எடுத்து வரவேண்டும். இல்லாவிட்டால் வெளி நாடு சென்று திரும்பியதற்கான ஏதேனும் ஆதாரம் ஒன்றை சமர்பிக்க வேண்டும் என மேலும் குறிப்பிடப் பட்டுள்ளது..!!