கண்முன் துடிதுடித்து இறந்து போன மனைவி…! கதறி அழும் கணவர்..! மக்களே ஜாக்கிரதை..!!
இந்தியாவில் 40 வயது பெண் ஒருவரை யானை மிதித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை நாளான நேற்று, பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் கிழக்கு பீட்டுக்கு உட்பட்ட வனப்பகுதி வழியாக குஞ்சூர்பதி டு மாங்குழி செல்லும் சாலையில் வனத்துறை அனுமதி பெறாமல் சென்ற பிரசாந்த் என்பவரின் மனைவி புவனேஸ்வரியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
பிரசாந்த் சொந்த தொழில் செய்யும் நிலையில் புவனேஷ்வரி வைத்தியசாலையில் பணி புரிந்து வந்துள்ளார். சம்பவ தினமான நேற்று பிரசாந்த், புவனேஸ்வரி உட்பட 8 பேர் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர். வனத்துறையினர் பாதுகாப்பற்ற இடமாக குறித்த இடத்தை அறிவித்திருந்த போதும் கண்டுகொள்ளாமல் நண்பர்களுடன் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் திடீரென காட்டுக்குள் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று விரட்டியுள்ளது. இதில் அனைவரும் ஓடியதில் யானை புவனேஸ்வரியை குறிவைத்து விரட்டியுள்ளது. 40 வயது கடந்த நிலையில் புவனேஸ்வரியால் ஓட முடியாத நிலையில் யானை அவரை பல முறை மிதித்து கொலை செய்துள்ளது.
மனைவியை பிரசாந்த் காப்பாற்ற முயன்ற போதும் முடியாத நிலையில் கண்முன்னே மனைவியை இழந்துள்ளார். அதன் போது அங்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டி உள்ளனர். புவனேஷ்வரியின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக அனுப்ப பட்டுள்ள நிலையில் பிரஷாந்தின் கதறல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..!!