இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை..!!
சுற்றுலா பயணிகளை அதிகமாக வரவழைப்பதற்கு இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபைக்கும், தாய்லாந்து சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபைக்கும் இடையில் இந்த சுற்றுலாதுரையின் முன்னேற்றத்துக்காக புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன் போது இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திலுள்ள பௌத்த வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும், தாய்லாந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கையிலுள்ள பௌத்த வழிபாட்டு தலங்களுக்கு வரவும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது என இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.