உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப் பட்ட 23 வயது இளம் பெண்..! சேலத்தில் நடந்த கொடூரம்..!!
சேலம் மாவட்டத்தில் உடலில் ஏராளமான காயங்களுடன் 23 வயது பெண் சடலமாக மீட்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த குப்புசாமி சசிரேகா தம்பதிகளின் மகளான கவுசியா என்பவரே இவ்வாறு மீட்கப் பட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த சரவணன் என்பவரை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்த கவுசிகா கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில்
அண்மைகாலமாக கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் பலமுறை இருவருக்கும் அறிவுரை வழங்கிய போதும் சரவணனின் தொல்லை பொறுக்க முடியாமல் தாய் வீட்டிற்கு வந்துள்ளார் கவுசிகா. இந்த நிலையில் நேற்றைக்கு முன் தினம் வெளியே சென்று வருகிறேன் என கவுசிகா சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் மகள் வீட்டிற்கு வராததால் பெற்றோர் தேடிச் சென்றுள்ளனர். அதன் போது உடல் முழுவதும் காயங்களுடன் கவுசிகா வயல் பகுதியில் கிடந்துள்ளார். உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் சில மணி நேரத்திற்கு முன்பே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மகளின் உடலில் காயங்கள் இருப்பதால் மகளை யாரேனும் அடித்து கொலை செய்திருக்கலாம் என கவுசிகாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்..!!