கல்முனையில் தீவிர வாதிகளை காட்டிக் கொடுத்த மூன்று முஸ்லீம் நபர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..! அரசு அதிரடி அறிவிப்பு..!
இலங்கையை அதிர வைத்த தாக்குதலில் இருந்து வழமைக்கு மக்கள் திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்ற நிலையில் இலங்கையில் இருந்து தீவிர வாதிகளை முற்றாக அழிக்க பாதுகாப்பு தரப்பு முயன்று வருகிறது. அதற்கான தேடுதல்கள் நாடு முழுவதும் இடம்பெற்று வரும் நிலையில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் பொருட்கள் தொடர்பில் பொலீஸாருக்கு தகவல் கொடுக்கும் படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
கடந்த 26ம் திகதி கல்முனை சாய்ந்தமருது பகுதியில் ரோந்து நடவடிக்கையில் இருந்த இராணுவத்தினரிடம் சந்தேகத்திக்கிடமான நபர்கள் இருப்பதாக ஊர்வாசிகள் தகவல் கொடுக்க அதனை பார்க்கச் சென்ற பொலீஸார் மீது தீவிர வாதிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இரு தரப்பும் மோதலில் ஈடுபட்ட போது தற்கொலை தாரிகள் குண்டை வெடிக்க வைத்து இறந்தனர்.
இதில் இருவர் பொலீஸாரால் காப்பாற்றப் பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தீவிர வாதிகளை காட்டிக் கொடுத்த மூன்று முஸ்லீம்களுக்கு ஒருவருக்கு 10 லட்சம் வீதமும் இந்த தாக்குதலை சிறப்பாக நடத்திய படையினருக்கு ஒருவருக்கு ஐந்து லட்சமும் பணப்பரிசு கொடுக்கப் படும் என அறிவித்துள்ளது. தீவிர வாதிகள் நாட்டிற்கு மட்டும் அல்ல வீட்டிற்கும் கேடு தான்.!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!