உயர் நீதிமன்ற நீதிபதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மடியில் இருந்து விழுந்து தற்கொலை..!!!
நாரஹென்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த சிறிசேன கடவத்தைஆராச்சி என்ற ஓய்வு பெற்ற கொழும்பு உயர் நீதிமன்றத்தின் நீதிபதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் வைத்தியசாலை கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துள்ளார்.
மேலும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சிறுநீரக நோய் உட்பட பல நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அங்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகின்றது. மேலும் அவரது மகன் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் போதே அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்த வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை கொழும்பு பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றார் எனவும் தெரிவித்தார்கள்.