இந்தியாவில் இடம்பெற்ற தேர்தலில் தமிழ் நாட்டில் மட்டும் நடந்த டுவிஸ்ட் ..! ஆட்சி அமைக்கப் போவது யார்.?
நாட்டில் இன்றைய தினம் வெளியான தேர்தல் முடிவுகள் மிகப் பெரிய டுவிஸ்டாகி உள்ளது. இந்த முடிவுகளை யாரும் எதிர் பார்த்திருக்க வாய்ப்புகள் இல்லை. கருத்து கணிப்புகள் பிரதமர் மோடி தலைமையினால பாஜக வெற்றி பெறும் என கூறிய போது வெற்றி பெற அதிகம் போராட வேண்டி இருக்கும் அல்லது சிறிய அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என மக்கள் கணித்திருந்தனர்.
ஆனால் தனித்து நின்று பெரும்பான்மை பலத்தை பெற்றார் மோடி. கூட்டணி அமைத்திருக்காவிட்டாலும் மோடி தான் வெற்றி பெற்றிருப்பார். இதே நிலையில் காங்கிரஸ் வெற்றி பெறும் என நினைத்த தொகுதிகளில் கூட தோல்வியை சந்தித்தது. தனித்து போட்டியிட்டு வெறும் 50 தொகுதிகளை மட்டுமே தன்வசமாக்கியது.
மற்றவை கூட்டணியாக கிடைத்தவை. இது மத்திய தேர்தலில் இருக்க.. தமிழ் நாட்டில் நடந்த இடைத்தேர்தல் மிகப் பெரிய டுவிஸ்ட் கொடுத்திருக்கிறது. 39 தொகுதிகளில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மற்றைய 36 தொகுதிகள் திமுக வசமாகி உள்ளது.
எதிர்பார்ப்பில் உச்சத்தில் இருந்து திடீரென சரிந்த கட்சி என்றால் அமமுக தான். ஆர் கே நகர் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்க வைத்த அமமுக படு தோல்வி அடைந்தது யாராலும் கணித்திருக்க முடியவில்லை. பெரும்பாலான தொகுதிகளில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் 3வது இடம் நான்காவது 5 வது என மாறி மாறி வந்தது.
அதே போல் நாம் தமிழர் கட்சியும் ஓரளவு முன்னேறியுள்ளது. இதில் அதிமுகவிற்கு மிகப் பெரிய போட்டியாக இருக்கும் என கணிக்கப் பட்ட அமமுக மட்டுமே கீழே விழுந்துள்ளது. அதிமுக 9 சீட் பெற்றுள்ளதால் தொடர்ந்தும் அதிமுக ஆட்சியே இடம்பெறும்.
திமுகவின் அதிரடி வெற்றி கடந்த ஆண்டுகளில் தமிழ் நாட்டு மக்களுக்கு கிடைத்த கண்ணீருக்கான பதில். இனி சரியான முறையில் அதிமுக மக்களுக்கு உதவினால் மீண்டும் எழுந்துவிடலாம். இல்லாவிட்டால் அமமுக தினகரனுக்கு ஏற்பட்ட நிலைதான் வரும்..!