குடும்பத் தகராறு காரணமாக 4 வயது மகனுடன் பாரத்தை முதுகில் கட்டிக்கொண்டு தற்கொலை செய்த தாய்…!!! இந்தியாவில் நடந்த பரபரப்பு..!!
குடும்ப தகராறு காரணமாக 4 வயது மகனுடன் பாரத்தை முதுகில் கட்டிக்கொண்டு குட்டையில் விழுந்து தற்கொலை செய்த தாயின் கொடூர செயலால் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் ஒசூர் அருகே ரத்னகிரி கிராமத்தைச் சேர்ந்த சாம்ராஜ் மற்றும் ராதா தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகராறு காரணமாக மனவேதனை அடைந்த ராதா தனது 4 வயதுடைய மகனுடன் பாரத்தை முதுகில் கட்டிக்கொண்டு கிராமத்தின் அருகிலுள்ள ரத்னகிரி காற்றாற்று குட்டையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அந்த பாதை வழியாக பயணித்த பொதுமக்கள் இவர்கள் இருவரின் சடலமும் குட்டையில் மிதப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கி நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இவர்கள் இருவரின் சட்டங்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.