திருமணமாகி வெறும் 10 நாட்களிலே பரிதாபமாக உயிரிழந்த புதுமாப்பிள்ளை..!! தமிழகத்தில் நடந்த சோகம்..!!
திருமணமாகி வெறும் 10 நாட்களிலே புதுமாப்பிள்ளை பரிதாபமாக பலியான சம்பவம் தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய தினேஷ்குமார் என்ற இளைஞனுக்கும் அதே பகுதியை சேர்ந்த 27 வயதுடைய கலைச்செல்வி என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது. மேலும் இந்த நிலையில் புதுமணத்தம்பதிகள் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்றனர். குறித்த நிகழ்வை சிறப்பாக முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளனர்.
அந்த நேரத்தில் வீதி ஓரத்திலிருந்த டிரான்ஸ்பார்மரில் மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியுள்ளது. அந்த மோசமான அந்த விபத்தில் தினேஷ்குமார் படுகாயம் அடைந்த நிலையில் உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்த போது வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி கலைசெல்விக்கு காலில் அடிபட்டதில் ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரித்து வரும் நிலையில் புதுவாழ்க்கையை ஆராம்பித்து 10 நாட்களிலேயே புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மனைவி விதவையானது தம்பதியின் குடும்பத்தினர்மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.