திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுக்காக சிறை சென்றது கிடையாது – உதயகுமார் விமர்சனம்
இந்தியா மக்களுக்காக இதுவரைக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் என்ன செய்தார்? சிறை சென்றது கிடையாது எனவும், அவர் தொடர்ந்து பொய் கூறுவதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் ஊடகவியலாளர்களிடம் கதைத்த அவர், மக்களுக்காக சிறை போனதாக தெரிவித்த ஸ்டாலின், கச்சத்தீவு, காவிரி போன்ற விவகாரங்களுக்காக சிறை சென்றாரா என கேள்வி எழுப்பப்பட்டது. மக்களுக்காக இவரைக்கும் ஸ்டாலின் சிறை சென்றது கிடையாது என ஆர்.பி.உதயகுமார் குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைப் பெரியாறு, காவிரி உட்பட் பிரச்சினைகளில் சட்ட சண்டை மேற்கொண்ட தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளை மீட்டுக் கொடுத்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின், தமது வாய் ஜாலத்தால் மக்களை ஏமாற்ற நினைப்பதாகவும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.