80 கிலோ மீட்டர் நடந்து சென்று தனது வருங்கால கணவனை கரம் பிடித்த 20 வயது இளம் பெண்..!!
20 வயதுடைய இளம் பெண் ஒருவர் 80 கிலோமீட்டர் நடந்து சென்று வருங்கால கணவனை கரம் பிடித்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கான்பூரை சேர்ந்த 20 வயதுடைய கோல்டி என்ற இளம் பெண்ணுக்கும் கன்னோஜை சேர்ந்த வீரேந்திர குமார் என்ற இளைஞனுக்கும் கடந்த 4 ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால், பெண் வீட்டார் திருமணத்தை ஒத்தி வைத்தனர்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த கோல்டி, போக்குவரத்து வசதிகள் இல்லாததையும் பொருட்படுத்தாமல், 80 கிலோ மீட்டர் நடந்தே சென்று வீரேந்திர குமாரின் வீட்டை அடைந்துள்ளார்.அதையடுத்து அங்குள்ள புராதான கோவிலில், இரு வீட்டாரின் சம்மதத்துடன், முகக்கவசம் அணிந்து மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர்.