உயிர்க் காதலி பேச மறுத்ததால் 5 இலட்சம் ரூபா இழப்பீடு கேட்டு மிரட்டிய காதலன்..!!
இந்தியாவில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய கிருஷ்ணகுமார் என்ற இளைஞன் மொபைல் போன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில வருடத்திற்கு முன்னர் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகுமாரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதனால் காதல் ஜோடி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்துள்ளனர். கடந்த 4 மாதமாக காதலி கிருஷ்ணகுமாரிடம் பேசுவதை தவித்து வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த காதலன் சிறுமியின் இல்லத்திற்கு சென்று தகராறு செய்துள்ள நிலையில் ரூ.5 இலட்சம் பணம் கொடுக்காவிடில், இருவரும் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் மாபிங் செய்து வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளான். இதனால் பயந்து போன மாணவி அங்குள்ள குனியமுத்தூர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார், மேலும் இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் கிருஷ்ணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.