கள்ளக்காதலியுடன் இருந்த கணவனை கையும் களவுமாக பிடித்து புரட்டி எடுத்த மனைவி..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ!
மனைவியை பிரிந்து கள்ளக்காதலியுடன் வாழ்ந்து வந்த கணவனை புரட்டி எடுத்த மனைவியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த துளசி என்பவர் அரசு ஊழியாராக பணியாற்றி வந்தார். இவர் சீனிவாஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு மாதமாக துளசியை விட்டு பிரிந்து சென்ற கணவர் சீனிவாஸ் வீட்டிற்கு வரமால் இருந்தார். கணவர் எங்கு சென்றார் என விசாரித்ததில் வேறொரு பெண்ணுடன் தொடர்ப்பு இருப்பது துளசிக்கு தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, பீட்பஜாரில் வாடகைக்கு வீடு எடுத்து அந்த பெண்ணுடன் சீனிவாஸன் தங்கியிருப்பதை உறுதி செய்த துளசி நேரில் சென்றுள்ளார். உறவினர்களுடன் வீட்டை முற்றுகையிட்ட துளசி, உள்ளே புகுந்து அந்த பெண்ணையும், கணவனையும் புரட்டி எடுத்தார். நடுரோட்டிற்கு இழுத்து வந்து இரண்டு பேரையும் வெளுத்து வாங்கிய பின்னர் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு இருவரையும் இழுத்துச் சென்றுள்ளார். உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று கணவர் மீது புகார் கொடுத்தார். கள்ளக் காதலிக்கும், கணவனுக்கும் மனைவி நடத்திய கச்சசேரி வீடியோ வேகமாக பரவி வருகிறது.
Videos & Video Copyrights Owned By: News7 Tamil PRIME