கள்ளக்காதலனுடன் சேர்ந்து கட்டிய கணவனை கொலை செய்த மனைவி…!!!
தமிழகத்தில் காரைக்குடியை சேர்ந்த மணிமுத்து என்பவர் கட்டாரில் பணியாற்றி வருகின்ற நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டு மொட்டை மாடியில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்த நிலையில் மணிமுத்து கிடந்தார்.
கணவன் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி பொலிசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ள நிலையில் உறவினர்களுடன் ஏற்பட்ட சொத்து தகராறால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதினர்.
மேலும் இந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக பூமதியே கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, பூமதியின் அழுகை செயற்கையாக இருப்பதை கண்ட பொலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அனைத்து விடயங்கல்;ளும் வெட்ட வெளியத்திற்கு வந்துள்ளது.
பொலிஸார் தெரிவிக்கையில், சம்பவம் நடந்த நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 2.45 மணிக்குள் பூமதி யாருக்கோ தொடர்ந்து 20 தடவை கால் பேசியுள்ளார். இது தொடர்பாக விசாரித்ததில் பூமதி சாமியார் வேல்முருகன் என்பவருடன் பேசியது தெரியவந்தது. வேலுமுருகன் 15 வருடங்களுக்கு முன்னர் புதையலை எடுத்து தருவது தொடர்பாக பூமதியை சந்தித்துள்ளார்.
இதை தொடர்ந்து இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது, இதோடு பூமதியின் கணவர் மணிமுத்து நிரந்தரமாக வெளிநாட்டிலேயே பணிபுரிந்து வந்ததால் எப்போதாவது தான் ஊருக்கு வருவார். இது இவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் 15 நாட்களுக்கு முன்னர் ஊருக்கு வந்த மணிமுத்துவுக்கு மனைவியின் தகாத உறவு குறித்து தெரிந்த நிலையில் அவரை கண்டித்தார். பூமதியோ தன்னுடைய கள்ளக்காதலானான சாமியாரிடம் கூறி, கணவனின் கை காலை உடைக்குமாறு கூறியிருந்தார்.
அதை அடுத்து இதுதான் நல்ல தருணம் என நினைத்து அமாவாசை தினத்தில் நடுநிசி 1 மணிக்கு நிர்வாண பூஜையை நடத்திவிட்டு தன்னுடைய கூட்டாளிகளான பிரகாஷ் மற்றும் குமாரை அழைத்து கொண்டு சாமியார் வேல்முருகன் மணிமுத்து வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த மணிமுத்துவை அனைவரும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வேல்முருகன், பிரகாஷ், பூமதியை கைது செய்துள்ளதாகவும், தலைமறைவாக உள்ள குமாரை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.