இந்தியாவில் மூளைக்காய்ச்சலால் 284 பேர் பலி.!அதிர்ச்சியில் மக்கள்..!!
இந்தியாவில் பீகார் மாநிலத்தில் வெப்பநிலை அதிகரிப்பு, மூளைக்காய்ச்சல் போன்ற காரணங்களினால் 284 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் பல இடங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில் அதற்கு எதிராக வட மாநிலங்களில் சுட்டெரிக்கும் அதி வெயின் தாக்கம் காரணமாக இதுவரை 184 பேர் பலியாகி உள்ளன இது தொடர்பாக சென்ற 2 வருடங்கள் மட்டும் 113 பேர் பலியாகி உள்ளன.மேலும் 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் அதிகமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் மட்டும் 36 பேரும் கயா மாவட்டத்தில் 28 பேரும் உயிரிழந்துள்ளனர். இவற்றில் அதிகமானோர் வயதானவராகவும் பெண்களாகவும் காணப்படுகின்றனர்.
இது போன்று பீகாரை சென்ற ஓர் மாதமாக மூளைக்காய்ச்சலும் அதிகமாக தாக்கியுள்ளது.
முசாபர்பூரில் சென்ற ஒரு மாதத்தில் மட்டும் 66 பிள்ளைகள் மூளைக்காய்ச்சலால் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மூளைக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் உள்ள 130 பிள்ளைகளுக்கு வைத்தியசாலையில் அதிசிகிச்சை வழங்கி வருகிறது. இம் மாநிலத்தில் மூளை காய்ச்சலால் பலியான பிள்ளைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகமாகவுள்ளது.பீகார் மக்களுக்கு வெயில் கொடுமை, மூளைக்காய்ச்சல் என இரட்டை தாக்குதலால் துன்பங்களையும் வேதனைகளையும் எதிர் கொண்டு வருகின்றனர்.