தமிழகத்தில் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு நடைமுறைக்கு வந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு …!!!
தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 1,63,579 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு திட்டம் அமல்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சு உத்தரவு விட்டுள்ளார்.
அதன்படி காலாண்டு விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 1 தொடக்கம் 8 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர்களும், பணியாளர்களும் தங்கள் வருகையை பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கருவியில் பதிவு செய்துள்ளனர்.