18 வது மாடியிலிருந்து குதித்த தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் முதியவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை…!!!
பல நோய்களால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் 18 வது மாடியிலிருந்து குதித்த வேளையில் கீழே நின்ற முதியவர் மீது விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 30 வயதுடைய மம்தா ஹன்ஸ்ராஜ் ரதி என்ற பெண் ஒருவர் கடந்த சில நாட்களாகவே தன்னுடைய சகோதரன் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பல நோய்களால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான மம்தா நேற்று காலை தற்கொலை செய்து கொள்வதற்காக 18வது மாடியில் இருந்து குதித்துள்ளார்.
அந்த நேரத்தில் தரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 69 வயதுடைய பாலு காமித் என்ற முதியவரின் தலையில் வேகமாக வந்து விழுந்ததால், சம்பவ இடத்திலேயே, மம்தாவுடன் சேர்ந்து ஒண்டும் அறியாத முதியவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு இருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.