காதலை ஏற்க மறுத்த பெண் ஒருவரை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞன்…!! பின்னர் நடந்த கொடூர செயல்..!!
கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த நிதன் என்ற இளைஞன் காக்கநாடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலை பலமுறை கூறியும் அப்பெண் நிராகரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இருந்த நிதின் அப்பெண்ணை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ தினத்தன்று நள்ளிரவில் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்ற நிதின், வெளியே வருமாறு கூறியுள்ளார். நடக்கப்போகும் விபரீதம் குறித்து அறியாமல் வெளியே வந்த இளம்பெண்ணின் மீது மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். அதையடுத்து தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டதும் அலறித்துடித்துக் கொண்டு காப்பாற்ற சென்ற பெண்ணின் தந்தை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.