தாய் திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதால் மகள் தூக்கிட்டு தற்கொலை..!!!
சேலத்தில் மூனாங்கரடு பகுதியை சேர்ந்த முருகேசன் – கந்தம்மாள் தம்பதியினரின் ஒரே மகளான மோனிஷா என்பவர் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
மோனிஷாவின் தந்தை முருகேசனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மோனிஷாவிற்கு வேளைக்கு திருமணம் செய்து வைக்க அவளின் தாய் மற்றும் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மோனிஷாவிடம் அவர்கள் பேசினார்கள்.
அப்பொழுது எனக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை, என்னை தயவு செய்து விட்டு விடுங்கள், நான் தொடர்ந்து படிக்க வேண்டும் என மோனிஷா தாயிடம் கூறினார். பின்னர் அதே நாள் மாலை தனது துப்பட்டாவால் மோனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மோனிஷாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் மோனிஷாவின் தாய் மற்றும் உறவினர்களிடம் விசாரணையை நடத்தினார்.
மோனிஷாவின் தாய் திருமணத்துக்கு கட்டாயப்படுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.