கர்ப்பிணி பெண்ணொருவரிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு ஓடிய திருநங்கைகள்…!!
இந்தியாவில் ஹரியானா மாநிலத்தின் குர்கானை சேர்ந்த நபர் தனது கர்ப்பிணி மனைவியுடன் வீட்டில் இருந்தார். இந்த வேளையில் அவர்கள் வீட்டுக்கு வந்த திருநங்கைகள் தங்களுக்கு பணம் தருமாறு கேட்டார்கள்.
இதையடுத்து குறித்த கர்ப்பிணி பெண் அவர்களுக்கு 2100 ரூபா கொடுத்தார், அப்போது திருநங்கைகள் எங்களுக்கு 2100 ரூபா வேண்டாம் 21000 ரூபா தான் வேண்டும் என கூறியுள்ளனர்.
இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்ணின் கையில் இருந்த பர்ஸை திடீரென திருநங்கை பறித்துள்ளார், பின்னர் இன்னொரு திருநங்கை கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றார். அப்போது அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி பெண் கத்தியதை தொடர்ந்து அங்கிருந்த திருநங்கைகள் தப்பி சென்றுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கர்ப்பிணி பெண்ணும் அவர் கணவரும் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.