டாக்காவில் ஏற்பட்ட கடும் தீ விபத்து..!!
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் கடும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 15,000 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதனால் 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல் கடந்த வெள்ளிக்கிழமை சலந்திக்கா (Chalantika)பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பாளர்கள் 6 மணி நேரத்துக்கும் மேல் போராடி அதன் பின்னர் இந்த தீயை அணைத்துள்ளனர்.
இந்த தீ சம்பவம் குறித்த பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
பல வீடுகளின் பிளாஸ்டிக் கூரைகளாக இருந்த காரணத்தினால் தீ வேகமாகப் பரவி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் சிலருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
டாக்காவில் வசிப்போரில் அதிகளவானவர்கள் குறைந்த சம்பளம் வாங்குபவர்கள். தீச்சம்பவம் ஏற்பட்ட போது ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நடந்த விழாவில் கலந்துகொள்ள அனைவரும் சென்றார்கள். பின்னர் திரும்பி வீட்டிற்கு வந்த போது வீடுகள் அனைத்தும் தீயில் கருகுவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்க இடமில்லாமல் தவிக்கும் இவர்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று பங்களாதேஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.