சினமன் ஹோட்டல் மற்றும் சங்ரீலா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் தந்தை கொடுத்த அதிர வைத்த வாக்குமூலம்..!
இலங்கையை அதிர வைத்த தற்கொலை தாக்குதலில் 250 மேற்பட்ட உயிர்கள் பலியானதுடன் ஏராளமானவர்கள் இன்றும் உயிருக்கு போராடி வருகின்றனர். தீவிரவாதிகளின் இந்த தற்கொலை தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டதுடன் கைதுகளும் இடம்பெற்று வருகிறது.
தாக்குதல் நடத்தியவர்களில் இலங்கையின் பிரபல வர்த்தகரான இப்ராஹீம் ஹாஜீயாரின் இரண்டு மகன்களும் அடங்குவார்கள். சங்ரீலா மற்றும் சினமன் ஹோட்டலில் தாக்குதல் நடத்தியது இவரது மகன்களான இல்ஹாம் மற்றும் இன்ஹாம் ஆகும்.
இதனை தொடர்ந்து கைது செய்யப் பட்ட இப்ராஹீம் ஹாஜியாரிடம் புலனாய்வு துறை விசாரணை நடத்தி வருகிறது. புலனாய்வு பிரிவினரிடம் இப்ராஹீம் வழங்கிய வாக்குமூலம்” எனது மகன்கள் இருவரும் வியாபாரத்தில் திறமையானவர்களாக இருந்தார்கள்.
அடிக்கடி வெளிநாட்டிற்கு வியாபார விடயமாக சென்று வருவார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக இவர்களது நடவடிக்கையில் மாற்றம் இருந்தது இதனை அவதானித்து எச்சரிக்கை செய்தேன். ஆனால் இவர்கள் தற்கொலை தாக்குதல் நடத்துவார்கள் என்று நினைக்கவில்லை.
இந்த அழிவு நடக்கும் என தெரிந்திருந்தால் நிச்சயம் அதனை தடை செய்திருப்பேன் அல்லது பொலீஸாருக்கு சரி தகவல் கொடுத்திருப்பேன் என கூறியதோடு என் மகன்களிடம் ஏராளமான பணம் இருந்தது நான் வியாபார பணம் என நினைத்தேன் ஐ எஸ் கொடுத்த கூலியாக இருந்ததை நினைத்து வெறுப்பில் இருகிறேன் என தொடர்ந்தும் கூறியுள்ளார்..!