இருமல்,காய்ச்சல் இல்லாமல் இந்த அறிகுறி இருந்தாலும் கொரோனா வைரஸ் தான்..! பாதிக்கப் பட்ட நபர்கள் வெளியிட்ட தகவல்….!!
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அனைவரும் இதனை கட்டுப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், இதற்காக ஒரு பக்கம் உலக சுகாதார அமைப்பும் , உலக நாடுகளும் போராடி வருகின்றது.கொரோனா வைரஸ் பற்றிய சில அறிகுறிகளை வைத்தியர்கள் அறிவித்திருந்தனர்.
அதாவது இருமல், தொண்டை வலி, காய்ச்சல், மூச்சுத் திணறல், என அறிவித்திருந்த நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலர் கொரோனாவின் அறிகுறிகள் இருமல் காய்ச்சல் மட்டும் இன்றி இன்னும் சிலதும் இருக்கின்றதாம்.
பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில் கொரோனாவிற்கான அறிவித்த எந்த ஒரு அறிகுறியும் இருக்கவில்லை. திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அது பின் அதிகமானது. யாரோ ஒருவர் என் நெஞ்சை பிடித்து அழுத்துவது போல் இருந்தது மூச்சு எடுக்க முடியவில்லை.
அதன் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது தான் எனக்கு கொரோனா என்பது தெரியவந்தது என தெரிவித்துள்ளார். கப்பலில் பணிபுரியும் ஈராக்கை சேர்ந்த முபீன் என்பவர் கூறுகையில் எனக்கு உடம்பு வலி மட்டுமே இருந்தது.
காய்ச்சல் , இருமல் ஏதும் இல்லை, 14 நாட்கள் தனிமை படுத்தப் பட்ட போது நடந்த பரீசோதனையில் எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப் பட்டது. இதில் இருந்து புரிந்துகொள்ள முடிந்தது எந்த நேரத்திலும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இன்றி எம்மை தாக்கலாம், அதனால் கவனமாக இருக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்..!!