இலங்கையில் நடந்த தீவிர வாத தாக்குதலுக்கு பணம் பெற்றுள்ள ஐ எஸ் அமைப்பு..! யாரிடம்? எப்போது விபரம்..!
இலங்கையில் கடந்த 21ம் திகதி நடந்த ஐ எஸ் தீவிர வாத தாக்குதலுக்கு பல கோடி ரூபாய் பணம்கொடுக்கப் பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. “கொயின்பேமண்ட்ஸ்” நிறுவனத்தின் ஊடாக இந்த பண பறிமாற்றம் இடம் பெற்றுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தாக்குதலுக்கு முதல் நாள் ஐ எஸ் தீவிர வாத இயக்கத்தின் கணக்கில் வெறும் 5 லட்சம் டாலர்கள் மட்டுமே இருந்த நிலையில்
தாக்குதல் நடந்து அடுத்த நாள் அதாவது 22ம் திகதி 4.5 மில்லியன் டாலர்களாக வங்கிப் பணம் அதிகரித்துள்ளது. 23ம் திகதி மறுபடியும் பணம் குறைந்து 5லட்சம் டாலர்களாகி உள்ளது. புலனாய்வு துறையின் அறிக்கைப் படி இது இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலுக்கு கிடைத்த நன்கொடையாக இருக்கலாம் அல்லது பேரம்பேசப்பட்டு இந்த தாக்குதல் இடம் பெற்றிருக்கலாம் என தெரிய வருகிறது.
ஐ எஸ் என்பது எந்த ஒரு குறிகோளும் இன்றி மனிர்களை கொன்று புதைக்கும் அமைப்பாகும், பணத்திற்காக எதையும் செய்யகூடியவர்கள். மதத்தின் பெயரை வைத்து மனிதர்களை அழிக்கும் மிருகதனமானவர்கள். இவர்கள் எதையும் செய்பவர்கள் என்பதால் பேரம் கூட பேசப் பட்டிருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை இடம்பெறுவதாக இஸ்ரேலின் செய்தி தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது..!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!