இன்று திறந்து வைக்கப் பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு ஆரம்பித்த முதல் பிரச்சனை.!? சோகத்தில் தமிழர்கள்..!!
இன்றைய தினம் காலை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களால் “பலாலி சர்வதேச விமான நிலையம்” திறந்து வைக்கப் பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது.
யாழ் பலாலி விமான நிலையத்திற்கு முதல் விமானமாக சென்னையில் இருந்து வந்த அலயன்ஸ் எயர்லைன்ஸ் தரையிறங்கியது. சிறப்பாகவும் பெருமையுடனும் இன்றை நிகழ்வுகள் இடம் பெற்றது. இருப்பினும் இன்றைய நாள் திறப்பு விழாவிற்காக மட்டுமே விமானம் தரையிறக்கப் பட்டுள்ளது.
பயணிகள் பாவனைக்காக வரும் 27ம் திகதியே விமானங்கள் இயங்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. யாழ் மக்களுக்கு இந்த விமான நிலையம் வரபிரசாதமாகும் என பலர் தெரிவித்து வருகின்றனர். தமிழ் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்வை சில சிங்கள ஊடங்கள் விமர்சிக்க ஆரம்பித்து விட்டன.
அதன் படி யாழில் சிங்களத்திற்கு இரண்டாம் இடம் கொடுக்கப் பட்டது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இலங்கையின் தேசிய மொழியான சிங்களமே முதலிடம் பெற வேண்டும் எனவும் புது பிரச்சனையை உருவாக்கி வருகின்றனர்.யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள விமான நிலையத்தின் பெயர் பலகையில் முதல் மொழியாக தமிழ் மொழி எழுத்தப் பட்டுள்ளது.
இரண்டாவதாக சிங்கள மொழியும் மூன்றாவதாக ஆங்கில மொழியும் எழுதப்பட்டுள்ளது. பொதுவாக யாழ்ப்பாணத்தில் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து வருவது வழக்கமாக இருக்கிறது இந்த நிலையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என எழுந்திருக்கும் விமர்சனமானது
தமிழர்கள் மீதான அடங்கு முறையின் ஆரம்பமாக உள்ளது. எதிர் வரும் காலங்களில் யாழ் விமான நிலையத்தில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப் படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது..!!